Saturday, August 15, 2015

தனியாக இலுப்பெண்ணெய் தீபம் வேண்டாம்

தனியாக இலுப்பெண்ணெய் தீபம் வேண்டாம்

இலுப்பெண்ணெய் ஊற்றி சிவன் ஆலயத்தில் தீபம் ஏற்றினால், சிவன் அருளால் கடன் தொல்லை நீங்கும், சுகவாழ்வு அமையும், இலுப்பெண்ணெய் ஈசனுக்கு உகந்தது ஆகும். எனவே, இலுப்பெண்ணெய் மட்டும் தனியாக ஊற்றி வீடுகளில் கண்டிப்பாகத் தீபம் ஏற்றக்கூடாது. தேங்காய் எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றினால் விநாயகர் அருளால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். 

தேங்காய் எண்ணெய் தீபம் அர்த்த நாரீஸ்வரர் கோவில் மற்றும் விநாயகர் கோவில் ஆகியவற்றில் ஏற்ற சிறப்பான பலன்கள் ஏற்படும். பசு நெய் + இலுப்பெண்ணெய் + வேப்பஎண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து தீபம் ஏற்றினால் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்பட்டு, செல்வம் பெருகி, நிறைவான வாழ்க்கை அமையும்.

No comments:

Post a Comment